×

சிறுமியை கடத்தி பலாத்காரம்; போக்சோவில் வாலிபர் கைது

ஆவடி: பள்ளி மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருமுல்லைவாயல் மணல் ஓடைத்தெருவை சேர்ந்த 16 வயது சிறுமி அம்பத்தூரில் அரசு பள்ளியில் 11வது படிக்கிறாள். கடந்த 9ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவள் வீடு திரும்பவில்லை. அவளை பெற்றோர் பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, திருமுல்லைவாயல் காவல் நிலைத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் செய்தனர். அதன்படி இன்ஸ்பெக்டர் விஜயராகவன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில், சிறுமியை தாம்பரம் கடப்பேரி முத்தமிழ் நகரை சேர்ந்த சஞ்சய்(19) கடத்தி சென்றது தெரியவந்தது. போலீசார் கடந்த 12ம் தேதி சஞ்சயிடம் இருந்து சிறுமியை மீட்டனர். மேலும், திருமண ஆசை காட்டி சிறுமியை சஞ்சய் கடத்தி சென்று உறவினர் வீட்டில் தங்கவைத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இந்த வழக்கை திருமுல்லைவாயல் போலீசார் ஆவடி அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு மாற்றினர். அதன்படி இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சஞ்சயை நேற்று முன்தினம் கைது செய்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளைச்சிறையில் அடைத்தனர்….

The post சிறுமியை கடத்தி பலாத்காரம்; போக்சோவில் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Volliber ,Boxo ,Awadi ,Tirumullaivale Sand Flow ,
× RELATED கள்ளக்குறிச்சி அருகே திருமண ஆசை...